தாயுமானவள்

தாயுமானவள் செல்ஃபோனை வீட்டில் விட்டுச் சென்றிருந்தேன். பார்த்தால் 4 தவறிய அழைப்புகள். இரண்டு பால விநாயகம் அண்ணனிடமிருந்து.  மற்ற ரெண்டு தெரியவில்லை. புது எண். “ தம்பியை உன்னிடம் பேசச்சொன்னேன். அவன் கூப்பிட்டிருப்பானே?” என்றார் பாலா அண்ணன். “ கொஞ்ச நாளாவே கிறுக்கு பிடிச்சு அலையறான். எனக்கும் அவனுக்கும் சண்டை வந்து, அம்மா, உன்னைப் பேசச்சொன்னாங்க. என்னன்னு கேளு” என்றார் கோபமும் விரக்தியுமாக.  “சும்மா பேசு. அதான் அம்மா சொல்லிட்டாங்கள்ல?” என்ற பாலா அண்ணனின் சொற்கள் உறுதி […]

நல்ல பிள்ளைக்கு நீலம்

1974 – அம்பாசமுத்திரம் எதுவும் சொல்வதற்கு முன் அம்மா,  “ மறந்தே போயிடுத்து. டேய்,  முடி வெட்டிண்டு வா.சீக்கிரம் போ. கூட்டம் வந்துடப் போறது”   ‘இன்னிக்கு ஞாயித்துக்கிழமை’ அண்ணன் வேண்டுமென்றே கத்திச் சொன்னான். ஒரு ஸேடிஸம் இருப்பதாகப் பட்டது எனக்கு. கிருஷ்ணன் கோவில் தெருவில் 1970களில் வாழ்ந்த பொற்காலங்களில் சில களப்பிரர் காலங்களும் இல்லாமலில்லை. டூ லேட். கடுப்புடன் 25 பைசாவை டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு , திட்டிக்கொண்டே , ஆர்ச் நோக்கி நடக்கலானேன். முடி […]

Getting the ‘Killing Instinct’

As usual, we had the weekend family parlance last Sunday. Topic drifted to ‘courage to perform at the right moment’, when faced with a challenge. ‘You might have prepared well, you might be well equipped , time is right, but if the drive does not come to go for the kill, you don’t win’ I […]

வெள்ளை ஒளியும் கடவுளும்

“பையன் என்னமோ கேக்கறான். பதில் சொல்லுங்கோ, பாப்போம்” சுந்தர் ஐயங்கார் ( பெயரில் ஐயங்கார் என்றிருப்பதால் அவர் தீவிர வைணவரல்ல. மூன்றாம் தலைமுறையாக பிறந்ததே மும்பையில் என்பதால், ஸர் நேம் என வந்தது) கேட்டுவிட்டு, ஒரு புறமாகச் சாய்ந்து, தன்னிரு கைகளையும் தட்டி கால்களுக்கிடையே சேர்த்துவைத்துக்கொண்டு சிரித்தார். முகத்தில் பெருமை. “என்னடா கேட்டே?” என்றேன். ஒருவருடம் முன்பான உரையாடல் இது. கோவிட் தீவிரம் அறியாது, பலரும் கோவிட் பற்றி பாட்டு, கவிதை என எழுதிக் கொண்டிருந்த காலம். […]

ஆவுடைநாயகி 1

“ஆவுடையக்கா எங்க வீட்டுப்பக்கத்துலதான் இருந்தாங்க” இந்தச் செய்தியில் பரபரப்பானேன். வீரராகவனுக்கு உடனே போன் செய்தேன். “ஆங்! அடுத்த தெருன்னு சொல்லலாம்.. தாமரை லே அவுட்ல கடைசி வீடு. நாங்க முல்லை லே அவுட். இதுல ரெண்டு பெட்ரூம்”இடைமறித்தேன். எத்தனை BHK என்பது முக்கியமல்ல. எளவெடுத்தவனே! வாழ்வில் ஒருதடவையாவது ஒழுங்கா கேட்டதுக்கு பதில் சொல். “ஆவுடையக்கா போனவருசம் காலிபண்ணாங்கன்னு சொல்றாங்க. கோவிட் நேரம் பாத்தியா? யார் என்ன ஆனாங்கன்னு சரியாத் தெரியலை. “அடச் சே.. அடுத்ததாகச் சொன்னான் ” […]

கதை வாசிக்கும் முறை.

ஜி மெயிலை நேற்றுதான் பல நாட்களுக்குப் பிறகு திறந்தேன். மென்னியை நெறிக்கும் சிறு சிறு வேலைகளில் சொந்த வாழ்வு பல நேரம் மறந்து போகிறது. இரு மின்னஞ்சல்கள் கவனத்தை ஈர்த்தன. ஒன்று 7.83 ஹெர்ட்ஸ் நாவலில் வரும் ஹார்ப் (HAARP) குறித்த கேள்வி .”வாசிப்பவனுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென நினைக்கிறீர்களா? ஒரு மேட்டிமைத்தனம் தெரிகிறது” என்பதாகச் சென்றது. அவருக்கு பதில் எழுதினேன். ” வாசிப்பவர் மேலும் தெரிந்துகொள்ள முயல்வார், ஆவலாக இருப்பார் என்று நினைக்கிறேன். அந்த எதிர்பார்ப்பு […]

காவல் மீன்கள்

வானம் மந்தமாக , எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாமெனப் பயமுறுத்தியது. பேராசிரியர் அழகர்சாமி,  ஆய்வு மாணவி தமயந்தியை ஏறிட்டார். ”வீட்டுக்குக் கிளம்பும்மா. மழை பெருசா வரும்போல இருக்கு”  “வணக்கம் சார்”. ஜோசப் வாசலில் நின்றிருந்தான். “கிளம்பிட்டீங்களா ப்ரொபஸர்? அப்ப நாளைக்கு வர்றேன்” .  “ வராதவன் வந்திருக்க. சொல்லு. பேசிக்கிட்டே போலாம்” மூவரும் பல்கலை இயற்பியல் துறையின் நீண்ட தாழ்வாரத்தில் நடந்தனர். “நீங்க போனவாரம் ‘அறிவியல் அறிவோம்’ கழகத்துல பேசினது மனசுல ஓடிட்டிருக்கு சார். ஒவ்வொரு செயலிலும் […]